Friday, July 31, 2020

கண்ணன்


அன்புள்ள ஜெ

இளைய யாதவரின் முடிவு இந்நாவலில் ஒரு இயல்பான நிகழ்ச்சியாக வந்துசெல்கிறது. நீங்கள் பேசும்போது உத்தம மரணங்கள் மூன்று என்றீர்கள்.யோகியரின் மரணம். போரில் மரணம். பெருந்தந்தையாக மரணம். மூன்றுமே அவனுக்கு வாய்க்கவில்லை. அவன் வேடனால் கொல்லப்பட்டான். அனாதையாக இறந்தான். அவன் கண்னெதிரே அவன் நாடும் மைந்தரும் அழிந்தனர்

அவன் தெய்வம். ஆகவே தெய்வநெறிக்கு அவனும் கட்டுப்பட்டவன். நீர்ச்சுடரில் நீர்க்கடன் கழிக்க வரும் கௌரவமகளிருக்கு முன் கைகூப்பி நின்று அத்தனை சாபங்களையும் அவன் பெற்றுக்கொள்கிறான். அவனால் அந்த நியாயத்தைக் கடந்துசெல்லவே முடியவில்லை. இப்பிறவியிலேயே கடன் அடைத்து விண்ணுக்கு மீள்கிறான்.

வந்தகாரியம் முடிந்து மீண்டும் செல்லும்போது ஒரு மெல்லிய தித்திப்பாக எஞ்சியிருப்பது ராதையின் பிரேமம் மட்டுமாகவே இருக்கும் என நினைக்கிறேன்

மாதவ்