Sunday, July 19, 2020

வெண்முரசின் முடிவில்



வெண்முரசு,இணையில்லா காவியம். ஆசிரியரே.,2017ல்  நான் படிக்க தொடங்கினேன்., இன்னும் இன்னும் என நீண்டுகிடந்த பக்கங்களை கண்டு சொல்லிலடங்கா மகிழ்ச்சியில் திளைத்துக்கிடந்தேன்.பின்னர் இரவு பன்னிரண்டு வரை காத்திருந்து படித்த பின்னே உறங்கினேன்.  என்வாழ்வில் சிறந்தசெயலில் வெண்முரசு வாசிப்பு ஒருமணிமகுடம். சொல்லெனத்திரளா ஒர்உணர்வு. இந்நாவல் மூலம் பாரதபெருநிலம் முழுதும் வாழ்ந்து முடித்தேன். கோடிநன்றிக்கு உரியவர் நீங்கள். நிகழ்யுக வியாசனே., தமிழ்   வாழும்காலம்வரை உங்கள் அறஎழுத்து முதன்மையாய் விளங்கும். உங்கள்சொல்லில் எழுந்த அறம் என்றும் நிலைப்பதாக. அவ்வறம் அகிலத்தை துலக்குவதாக. ஆம் அவ்வாறே ஆகுக.           

நன்றிநிறைநெஞ்சத்துடன்,                   

உங்கள் வாசகன்.
எம்.செல்வராஜ்