Saturday, July 18, 2020

வெண்முரசின் வெற்றி




அன்புள்ள ஜெ

நலம்தானே? நானும் நலமே. வெண்முரசின் இறுதி ஓர் ஆழ்ந்த அமைதியை உருவாக்கியது. அனைத்தும் ஒன்றோடொன்று தொட்டு முடிவடைந்தன. நாகர்களின் எழுச்சி, அடுத்த பல ஆண்டுகளில் இனங்களுக்கிடையேயான சிந்தஸிஸ் உருவாகி பாரதம் நிலைகொண்டது, வணிகம் வளர்ந்தது, ஜைனம் என்ற அகிம்சை மதத்தின் எழுச்சி என்று எல்லாமே மிகச்சரியாக அமைந்துவிட்டன. மகாபாரதம் பற்றிய எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிச் சொல்லிவிரிந்து மெல்ல ஒடுங்குகிறது. ஐந்தாவது வேதமான கீதை இந்தியாவிற்கு அளித்த கொடை என்ன என்று வெண்முரசைப்போல வரலாறு, ஆன்மீகம், தத்துவம் மூன்றையும் இணைத்துச் சொன்ன இன்னொரு நூல் இல்லை

எஸ்.சத்யமூர்த்தி