Wednesday, May 15, 2019

துச்சாதனன் மறைவு



அன்புள்ள ஜெ

துச்சாதனன் 17 ஆம் நாள் போரில் இறந்ததாகவே மகாபாரதம் சொல்கிறது. வெண்முரசில் 16 ஆம் நாள் போரிலேயே இறந்ததாகச் சொல்லியிருக்கிறீர்கள். அதற்கு ஏதேனும் காரணம் உண்டா?

செல்வா

அன்புள்ள செல்வா

சில வடிவங்களில் 16 ஆம் நாள் போரில் என இருக்கிறது. கதகளியின் கதைகளிலும் அவ்வாறு உண்டு.

எனக்கு துச்சாதனனின் இறப்பு சற்று ‘ஆலாபனை’க்கு உரியது என தோன்றியிருக்கலாம். 17 ஆம் நாள் போர் முழுக்கமுழுக்க கர்ணனுக்கு உரியது

ஜெ