Monday, April 4, 2016

புதிய பாதை


பன்னிரு படைக்களம் அற்புதமாக இருக்கிறது. ஒரு புதிய பாதையில் நடப்பது போல. ஒரு புது வெளியில் கால்வைத்தது போல இருக்கிறது. இன்று வரை போகாத நகரங்கள் எவ்வகையிலோ நமக்கு உற்சாகத்தையே கொடுக்கின்றன. முதலில் அவற்றில் இறங்கும்போது அவற்றின் கரவுகள் என்னவென்று அறியாது அதன் வடிவை எழிலை பார்த்து நகருவது போல இருக்கிறது. இன்னும் சில நாள் இந்த ஊர் தானே மெல்லத்தெரிந்துவிடும் இதன் வழிகள் புரிந்துவிடும் என்று தோன்றுகிறது

 அதில் இந்திரன் மனநிலை கூட இருமையென்று நிற்பதைக் கண்டு வியப்படைந்தேன். அப்படி இரண்டாகி நின்று இரண்டாவதை வெல்லும் வலிமையை தானே பழகிக் கொண்டிருக்கிறோம்

மீனாம்பிகை