Saturday, July 11, 2020

ஆற்றல்


அன்புள்ள ஜெ 

வெண்முரசு நிறைவடையப்போகிறது. கிட்டத்தட்ட தொகுப்புரையாகவே இந்நாவல் இருக்கும் என நினைத்தேன். ஆனால் இந்த அத்தியயாங்களில் வரும் புதிய விஷயங்கள் ஆச்சரியமூட்டுகின்றன. முக்கியமான விஷயம் ஒன்று இப்போது வந்தது. அஸ்தினபுரி வணிகத்திற்குரிய எந்த அமைப்பையும் உருவாக்கவில்லை. ஆற்றலை மட்டுமே உருவாக்கிக்கொண்டிருக்கிறது. அதுவே வணிகத்திற்கு ஆதாரமானது. இன்றைக்கு அமெரிக்காவின் ஆற்றல்தான் அதைச்சார்ந்தே வணிகம் அமையும்படிச் செய்திருக்கிறது. சம்வகை என்ற மகத்தான ஆட்சியாளரை நீங்கள் கௌரிபார்வதிபாயில் வரலாற்றிலும் எழுப்பிக் காட்டியிருக்கிறீர்கள் 

செந்தில்குமார்