Saturday, April 2, 2016

விதைகள்



ஜெ

ரம்பகுரம்பனின் பைத்தியநிலைகளின் உருவகச்சித்தரிப்புகள் பதறச்செய்கின்றன. ரத்தம் கூரையிலிருந்து சொட்டுவதும் சோற்றில் மலம்நாறுவதும் எல்லாம் வெறும் புராணங்கள் அல்ல. எனக்குத்தெரிந்தவர்களே அந்த நிலைகள் வழியாகக் கடந்துசென்றிருக்கிறார்கள்.


ஒரு விரலைக்கூட அசைக்கமுடியாமல் வெறுமே உள்ளம் உறைந்து கிடக்கும் குரம்பனும் பதறிக்கொண்டே இருக்கும் ரம்பனும் மனச்சிக்கலின் இரண்டு வடிவங்கள் பைப்போலார் என்று இன்றைக்குச் சொல்கிறார்கள்

அவர்களின் உடலில் அறியாமலேயே வந்துவிடும் அசைவு ரொம்ப முக்கியமானது. குணமாகிவிட்டது என்று தோன்றும். ஆனால் கடுகுபோல அந்த விதை எஞ்சியிருக்கிறது என்பதை அந்த அசைவே காட்டிவிடும்

மனோகரன்