Friday, July 10, 2020

மகாவியாசர்



அன்புள்ள ஜெ,

வெண்முரசில் முதற்கனலுக்குப் பின்பு இப்போதுதான் கிருஷ்ணதுவைபாயன மகாவியாசர் வருகிறார். இங்கே நிகழ்ந்த அனைத்தையும் அறிந்தவராகவும் எதனுடனும் சம்பந்தமே இல்லாதவராகவும் இருக்கிறார். அவருடைய அந்த aloofness ஆச்சரியமளிக்கிறது. நடந்த அனைத்தையும் வெறும் கதைகளாகவே அறிந்திருப்பவரின் aloofness அது என நினைக்கிறேன். அவர் அங்கிருப்பவர்களின் மனநிலைகளை புரிந்துகொண்டிருப்பவராகவே தெரியவில்லை. அவர் அனைவரையும் தன் கதாபாத்திரங்களகாவே காண்கிறார். அவருக்கு அவர்களை எல்லாம் நேருக்குநேர் பார்க்கவே முடியவில்லை. அந்த தூரம் ஆச்சரியமான ஒன்றாகவே இருக்கிறது 

சாரதி