Monday, July 24, 2017

உணர்வெழுச்சி





எப்பொழுதும் வெண்முரசு வாசிக்கையில் அதை ஒரு புத்தகத்தில் அலல்துகணினித்திரையில் வாசிக்கும் ஒரு கதையாக இன்றி உணர்வு பூர்வமாகவே வாசிப்பேன். நான் அப்படியே வெண்முரசை நேரடியாக அறிந்துகொள்ளும் எளிய வாசகிதான். பல சமயங்களில்.
அந்தந்த கதாபாத்திரங்களாய் மாறி மாறி உண்ர்வெழுச்சியுடனெ வாசிப்பேன் பின்னர் படித்து முடிந்ததும் அதிலிருந்து விடுபட வெகு நேரமாகும். இன்று ஒரே அத்தியாயத்தில் தமயந்தியாய், குற்ற உணர்விலிருந்த நளனாய்,சேடிப்பெண்ணாய், மாலினியாய்,இளவரசியாய், புஷ்கரனாய், கருணாகரராய் மாறி மாறிக் கொண்டே  வாசித்துக்கொண்டிருந்தேன். அன்னையின் காலில் ஓடி வந்துஇளவரசன் விழுந்து வணங்கும் போது அழத்துவங்கி இருக்க்றென் என்பதை நளன் உணவின்றி இருந்ததை வாசிக்கையில் சொட்டிய கண்ணீரிலிருந்தே அறிந்தேன். இன்று அதிகாலை வாசிக்க துவங்கிய்து, இந்த உணர்வெழுச்சியிலிருந்து விடுபட ஏறக்குறைய மதியமாகிவிட்டது.

லோகமாதேவி