Saturday, July 15, 2017

பிரகதாங்கப்பிரதீபம்





ஜெமோ,
இன்று பிரயாகை வாசித்துக்கொண்டிருந்தேன். அதில் வரும் அற்புதமான காட்சிகள் உள்ளம் மலரச்செய்தன. சூரியதேவரின் பிரகதாங்கப்பிரதீபம் எழுதப்படும் காட்சி, துருவகணித ஜோதிடம் உருவாகும் விதம் அபாரமான கற்பனை. என் தந்தை ஜோதிடர். துருவகணிதத்தை கொஞ்சம் தெரிந்தவர். மறைந்துவிட்டார். அவர் ஜாதகங்களில் துருவகணித முறைபடி சில குறிப்புகளைப்போடுவதுண்டு. அந்தமுறையே அழிந்துவிட்டது என்றும் ஒருசில எழுத்துக்களே உள்ளன என்றும் சொன்னார்கள். அந்த மாபெரும் நூலை எங்காவது நானே கண்டெடுத்துவிடுவதைப்பற்றி கனவுகண்டேன்.

ஜெகதீசன்