Sunday, July 9, 2017

வலவன்



அன்புள்ள ஜெ -

சந்தேகமே இல்லை. வலவன் கெத்தெல் சாகிபே தான் !

வெண்முரசில் உணவைப் பற்றி நிறைய வந்துள்ளது ஜெ. ஆனால் இப்படி பசித்தவர்களும் பயந்தவர்களும் உண்பதை பார்த்ததில்லை என்று நினைக்கிறேன். பரிமாறுபவனும் உண்பவனும் வேறு ஒரு உலகத்தில் உள்ளார்கள். அற்புதமான எழுத்து !  (அதுவும் நான் வேலைப்பளுவில் பல மணி நேரம் ஒன்றும் தின்னாமல் கடும்பசியில் இருக்கையில் படித்தேன். சில இடங்களில் கண்ணீர் வந்துவிட்டது)

சம்பவன் பீமன் காலில் விழும் இடம் உச்சம்.  குருபூர்ணிமை வணக்கங்கள் ஜெ.

மது