Monday, July 24, 2017

கற்றலின்பம்


அன்பு ஜெமோ  சார்,
                 விவாதத்தில் வஞ்சப்பெருங்காட்டின் விதை வாசித்த போதுதான் ஒன்று சட்டென்று விளங்கியது, பீமனுக்கு கர்ணன் மீதான கசப்பிற்கான காரணம்.

                   ஆம் துரியன் கர்ணன் சந்திப்பிற்கு முன்பே  பீமன் கர்ணன் சந்திப்பும், பீமன் உமிழும் கசப்பும், வெறுப்பும் நிகழ்ந்தது.ஏனெனில்  தானிழந்த துரியனின் அணுக்கத்தை, தனது இடத்தைப் பெறப் போகிறவன்  கர்ணன்  என்ற பீமனின் உள்ளுணர்வே கர்ணன் மீதான மாறாத வெறுப்பாகிறது. நீர்க்கோலத்தில் கானகத்தில் நகுலசகாதேவர்கள் அருகிருப்பதை உணர்வது வரை பீமனின் உள்ளுணர்வு நாமறிந்த ஒன்றே.       
           வெண்முரசிலிருந்து பெறும் கற்றலின்பம் வாழ்நாள் முழுமையும் தீரப் போவதே இல்லை


சிவமீனாட்சி செல்லையா