Thursday, July 28, 2016

கரையேறிய கடலலை



கரையேறிய கடலலை மீண்டும் கடலுக்கே சென்று கடலாகிவிடும் ஆனால் கரையேறிய நதியலை மீண்டும் நதியிடம் திரும்பி நதியாகுவதில்லை. தந்தையின்பாசம் கடலலைப்போன்றது என்று காட்டுகிறான் திருதராஸ்டிரன், பிள்ளையின்பாசம் நதியலைப்போன்றது என்று காட்டுகிறான் துரியோதனன்.

தந்தையின்மீது பாசமும் மதிப்பும் கொண்ட துரியோதன் பிறந்தநாள்முதல் கரையைமோதி மோதி உடைக்க முயற்சிச்செய்துக்கொண்டே இருந்தான், தந்தைமீது உள்ள மதிப்பு கடைசியில் தாய்மீது உள்ள மதிப்பு என்று கரையேறாமல் இருந்தான். தந்தையின் ஆனையை காலில் போட்டு மிதித்து கரையை கடந்துவிட்டான் இனி அவனே நினைத்தாலும் அவனால் திரும்பமுடியுமா? கரையை மோதி மோதி அரிப்பதும், கரையை உடைக்க முயற்றி செய்வதும்கூட குற்ற உணர்வுகளை எற்படுத்துவதில்லை மாறாக கரை ஏறுதல் என்பது 

தன்னையே அறுத்து அழித்துக்கொள்ளுதல்.
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
 
குன்றுவ செய்தல் இலர்-என்கிறார் திருவள்ளுவர். பெற்றோர்கள் மீது வைக்கும் நன்மதிப்பு, குடிபெருமை ஒழுக்கம் பண்பாடு என்பது எல்லாம் மானிடர்களுக்கு கரையாக வந்து வாய்த்து அவர்கள் வளர்ந்து பாய்ந்தோடி கடலாக அமைய வகுக்கப்பட்ட வெகுமதிகள். அவற்றை காமகுரோதமோகங்களால் அழிக்கும் மனிதன் தன்முடிவை மீளப்பழியோடு தேடிக்கொள்கிறான். துரியோதன் திருதராஸ்டிரன்மீதும் தாய்மீதும் வைத்தப்பாசம் நன்மதிப்பு இன்று கரையேறிய நதியலை ஆகிவிட்டது.

 
அஸ்தினபுரியின் அரசனாக, பாண்டவர்களின் பெரியப்பாக,காந்தாரியின் கணவனாக இருக்கும் திருதராஸ்டிரன் இறுதியாக துரியோதனனின் தந்தையாக இருக்கும் இடத்தில் கரையேறிய கடலலையென திரும்பி கடலுக்கே வந்து ஆச்சர்யப்படுத்துகின்றார்.  கடலலை கரையை உடைப்பதுபொல, கரையை தாண்டிசென்றுவிடவதுபோல எத்தனை எத்தனை ஆர்பரிப்பு, எல்லாம் ஒரு கணத்தில் சுழன்று திகைத்து திரும்பிவிடுவதற்குதானா? //“விதுராஎன்று அழைத்தார். அக்குரல் மாறுபட்டிருந்ததை சௌனகர் உணர்ந்தார். “மூத்தவரேஎன்றார் விதுரர். “எப்படி இருக்கிறான்?” விதுரர் ஒருகணம் கடந்துபிழைத்துக்கொண்டார் என்றார்கள்என்றார்.//
அந்த குரல் மாறுப்பட்டு இருப்பதுதான் இங்கு அழகு ஜெ.

ராமராஜன் மாணிக்கவேல்