Friday, July 29, 2016

உணவு




தம்பி மக்களின் மனைவி அடையக்கூடாத துன்பத்தை தனது அரசாட்சியில் தனது அரண்மனையில் அடைந்துவிட்டாள், தம்பி மக்கள் தொழும்பர்கள் ஆகிவிட்டார்கள், மனைவி கணவனை, மக்களை குலமூத்தாரை, குலஅமைச்சரை மகிடங்களாகி எண்ணிவிட்டாள். பாசம் வைத்த மகன் அடிப்பட்டு நோய்க்கொண்டு கிடக்கிறான். இது எதுவுமே நடக்காததுபோல் திருதராஸ்டிரன் சாப்பிடுகிறான். 

பாண்டவர்கள் தூங்குவது ஒரு மனநிலை என்றால் திருதராஸ்டிரன் சாப்பிடுவது ஒரு மனநிலை. மனிதர்கள் ஒரு பழக்கமான யோகநிலையை தன்னோடு இயல்பாக வைத்திருக்கிறார்கள் அதன் வழியாக மண்ணின் பெரும் கலகசூழ்நிலைகளைத்தாண்டி தனது ஆன்மாவை அந்த யோகத்தில் இணைத்துக்கொள்கிறார்கள்.  திருதராஸ்டிரனின் இந்த உணவு உண்ணும்யோகம் அவன் வாழ்வின் சிடுக்குகளில் இருந்து தப்பிக்க கண்டுபிடித்த யோகம் என்று நினைக்கிறேன். இசையையே ஒரு யோகமாக பழகும் திருதராஸ்டிரன் அதனைவிடவும் உணவு உண்ணும் யோகத்தில் உச்சம் தொட்டவன். 

//அவர் உண்பதை நிறுத்தவே இல்லை. இரு ஏவல் விலங்குகள் என அக்கைகள் அவர் வாயை ஊட்டிக்கொண்டே இருந்தன. நெடுங்காலமாக அக்கைகளுடன் ஒத்துழைத்துப் பழகிய அடுமனையாளர்கள் விரைந்த அசைவுகளுடன் உணவை கொண்டுவந்து வைத்துக்கொண்டிருந்தனர். கரிய அவருடல் ஆழமான குழிபோல் தோன்றியது. உணவு அதற்குள் சென்றுகொண்டே இருந்தது.//

 
இரு ஏவல் விலங்குகள் என அக்கைகள் அவர் வாயை ஊட்டிக்கொண்டே இருந்தன என்றபோது இந்த இணைப்பு நினைவில் எழுந்தது. உண்பதற்கு உயிர்கள் துடிக்கும் துடிப்புதான் என்னே!
https://www.youtube.com/watch?v=1tWLDhJ6mjQ
ராமராஜன் மாணிக்கவேல்.