Saturday, July 30, 2016

ஒரு கவிதை

அன்பு ஜெ ,

முகநூலில் பேயோனின் இந்தக் கவிதையைப் பார்த்தேன். அந்த பரவசத்தின் வலி என்பது தினம் நான் வெண்முரசில் அனுபவிப்பது தான். புளிக்குழம்பில் இடும் ஒரு துண்டு வெல்லம் போல் உங்களது நினைவைச் சுவைக்க வைக்கிறது.

//கலைஞர்கள் மனிதர்களா?

கலைஞர்கள் மனிதர்களா?
எப்படி மாறுபடுகிறார்கள்
நம்மிடமிருந்து அவர்கள்?
எங்கிருந்து வருகிறது இந்த ஆற்றல்?
ஒரு வண்ணத் தேன் குளத்தில்
நம் தலையைத் திரும்பத் திரும்ப
முக்கியெடுத்து மூச்சுத் திணறவைத்துக்
குறுக்கும் நெடுக்குமான மாஞ்சாக் கோடுகளில்
சிக்கிக் கூறுபட்டு ரத்தம் சிந்தவைக்கும்
மூர்க்கம் எங்கிருந்து வருகிறது?
நம்மைப் பரவசத்தின் வலியில்
திளைக்கச் செய்து பந்தாடும் உரிமையை
இவர்களுக்கு யார் கொடுத்தது?
எதிரிகளைப் போல் அல்லவா
நடந்துகொள்கிறார்கள்!
- பேயோன்  //

அன்புடன்
செந்தில்நாதன்