Sunday, July 31, 2016

ஊற்று



ஜெ

மகாபாரதத்தில் கடைசியில் தருமர் கண்டடைகிறார், எல்லாமே குந்தியின் திருஷ்ணையிலிருந்துதான் ஆரம்பிக்கிறது என. ஆனால் வெண்முரசு ஆரம்பத்திலேயே நுட்பமாக அதைப்போட்டுக்கொண்டே செல்கிறது. இன்றைய அத்தியாயத்தில் குந்தியின் மனக்கொந்தளிப்பையும் வன்மத்தையும் பார்க்கும்போது [எனக்கு ஏனோ இந்திராகாந்தி ஞாபகம் வந்தார்] அவளே நானே தொடக்கம் என்னும்போது ஒரு நடுக்கம் வந்தது

இரண்டுகாட்சிகள் மனதிலே ஓடின. ஒன்று சௌவீரநாட்டு மணிமுடியை அவள் தலையில் வத்துக்கொள்வது. இரண்டு அவள் குந்திபோஜன் மகலாகப்போக முடிவெடுப்பது. எவ்வளவு காலம் முன்பு. இந்தகுந்தியை சின்னப்பெண்ணாகப்பார்த்திருக்கிறேன் என்று நினைக்கும்போது மலைப்பாக இருக்கிறது

சிவராம்