Wednesday, July 27, 2016

கடிதங்கள்



மதிப்பிற்க்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

தொடர்ந்து கடிதம் எழுதமுடியாமல் போனதற்க்கு வருந்துகிறேன். மற்ற வாசகர்கள் தங்களுக்கு எழுதும் கடிதங்கள் மற்றும் தங்கள் பதில்களிலிருந்து எனக்கானவற்றைக் கண்டுகொண்டு நிறைவைடைந்து கொள்கிறேன். மற்றபடி வாசிப்பதை விடவில்லை. வெண்முரசு தொடர்ந்து வாசிக்கிறேன். வெண்முரசின் சிறப்பே அந்தக்காகட்டத்தைப் புனைவின் மூலம் இன்றைய நமது புறச்சிக்கல்களோடும் அறச்சிக்கல்களோடும் பொருத்திப் பார்த்துக்கொள்ளும்படியான வாசிப்பை அளிப்பததுதான். மனநிறைவு அலாதியானது.
 
என்றும் உங்கள் மானசீக வாசகனாய் மாணவனாய்த் தொடர விரும்பும்

அன்புள்ள
தா.விஜயரெங்கன்.