Sunday, July 31, 2016

சாணக்கியன்



ஜெ

நீங்களேகூட முன்னாடி எழுதி வாசித்த ஞாபகம். சந்திரகுப்த மௌரியனின் அமைச்சனாகிய சாணக்கியரைப்பற்றி முத்ரா ராக்‌ஷ்ஸம் நாடகத்தின் தொடக்கத்தில் ஒரு சித்திரம் வருகிறது. மௌரியப்பேரரசின் அமைச்சனாகிய சாணக்கியனின் குடிசை. அதில் ஒருபக்கம் வரட்டி. இன்னொருபக்கம் பிக்‌ஷாபாத்திரம். நடுவே மரப்பலகையில் அமர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறான்.

அதே சித்திரத்தைத்தான் நீங்கள் சௌனகருக்கு அளித்திருக்கிறீர்கள். மகாபாரதத்தின் புகழ்பெர்ற சௌனகநீதியை உரைத்தவர். அந்த நீதிமானுக்குரிய அழகான சித்திரம் அது. அவர்

அறமுரைக்க அந்தணன் மட்டுமே தகுதியானவன். ஏனென்றால் அவன் சொற்கள் உங்கள் ஆட்டக்களத்திற்கு அப்பாலிருந்து எழுபவை. தேவர்களைப்போல நாங்கள் உங்கள் முட்டிமோதல்களுக்கு நடுவே காற்றென கண்படாது உலவுகிறோம். ஒளியென விழியுடையோருக்கு மட்டும் காட்சியாகிறோம்.

என்ற வரியை நான் அந்தணனாக வாழ்பவனே அறமுரைக்கத் தகுதியானவன் என்று புரிதுகொள்கிறேன்

சுவாமி