Saturday, July 23, 2016

சொல்லும் பொருளும்



ஜெ,

சொல்வளர்காடு சூட்சுமமாக புரிந்துகொள்ளத்தக்கது. அதில் ஒரு குரோனாலஜிக்கல் வளர்ச்சி இல்லை. சிந்தனையில் அப்படி ஒன்று இருக்கமுடியாதுதான். சைக்கிளிக்கல்தான் இருக்கிறது. அதுதான் குழப்புகிறது

1. தொழில்செய்யும் வைதிகர். அவர்களுக்கு சொல்தான் முக்கியம். பொருள் அல்ல. அவர்கள் சொல்லை நிலைநிறுத்தும் முறைகளை உருவாக்குகிறார்கள்

2 ஞானவாதிகளான வைதிகர். அவர்கள் வேதங்களை விளக்குகிறார்கள்

3 சொல்லை வழிபடுபவர்கள் ஞானத்தைக் கண்டு அஞ்சுகிறார்கள். ஆனால் கடைசியில் ஞானத்தைக் கண்டுகொள்கிறார்கள்

4 ஞானத்தை வழிபடுபவர்கள் ஞானத்தின் எல்லையை அறிந்து சொல்லை வழிபடுபவர்களின் காலடியில் அமர்கிறார்கள்

கடைசியில் உத்தாலகரிடம் ஸ்வேதகேது செல்வதுதான் உச்சம். முழுக்க வாசித்தபின் திரும்ப ஒவ்வொன்றாக அடுக்கிக்கொண்டேன்

எஸ்.சிவக்குமார்