Tuesday, July 19, 2016

சொல்வளர்காடு





அன்புள்ள ஜெ

வெண்முரசு நாவலில் அடுத்ததான சொல்வளர்காடு வரவேண்டிய நாள் நீட்டிக்கொண்டே செல்கிறது. சென்ற மாதமே பன்னிரு படைக்களம் நாவல் முடிவுக்கு வந்துவிட்டது. இந்தமுறைதான் அடுத்த நாவல் இத்தனை நீண்ட இடைவெளியை எடுத்துக்கொள்கிறது என நினைக்கிறேன். அடுத்த நாவல் எப்போது வெளிவரும்?

சாமிநாதன்

அன்புள்ள சாமிநாதன்,

அடுத்தநாவலை நேற்றுத்தான் எழுத ஆரம்பிக்கமுடிந்தது. இன்னும் மூன்று அத்தியாயங்கள் கூட முடியவில்லை. 20 ஆம்தேதிக்குள் ஏழெட்டு அத்தியாயங்கள் முன்னால்செல்லும் என எதிர்பார்க்கிறேன். 20 ஆம் தேதி தொடங்கினால் வசதியாக ஒரு இடைவெளி இருக்கும், நிம்மதியாக இருக்கமுடியும். ஐரோப்பியப்பயணம் முடிந்து திரும்பிவந்து சில்லறை வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன்

ஜெ