Friday, July 15, 2016

அவர்கள் பிரிவதில்லை.





ஜெ

இந்திரநீலம் பற்றிய கடிதங்கள் வந்துகொண்டிருப்பதைக் காண்கிரேன். நானும் இந்த இடைவெளியில் இந்திரநீலத்தைத்தான் தொடர்ந்து வாசித்துவருகிறேன். இந்திரநீலம் பற்றிய பழைய கடிதங்களை வாசிக்கலாமென்று நினைத்தேன். ஆனால் கண்டுபிடிக்கமுடியவில்லை. கீழே போய்விட்டன. இந்த தளத்திலே வரும் கடிதங்களை நாவல் வாரியாக அடுக்கினால் எதிர்காலத்திலே வாசிக்க உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.

குறிப்பாக ஒருகடிதம் ஞாபகத்துக்கு வருகிறது. அதாவது கிருஷ்ணனின் எட்டு மனைவிகளும் லட்சுமிகள். பெருமாளை விட்டு அவர்கள் பிரிவதில்லை. ஆகவே அவர்களுக்குப் பிரிவாற்றாமையே இல்லை. அவர்கள் எப்போதும் மானசீகமாக அவர் மார்பிலேதான் இருக்கிறார்கள். ஆகவேதான் செவிலிகள் அந்த பிரிவுத்துயரை அடைகிறார்கள்

முக்கியமான கணிப்பு அது. அந்தக்கடிதத்தை மீண்டும்கூட பிரசுரிக்கலாம்

எஸ்.விஜயகுமார்