Sunday, July 31, 2016

பெண்மனம்



ஜெ

தருமன் காடு செல்ல முடிவெடுத்து ஒவ்வொருவரிடமாக ஆசீர்வாதம் வாங்கும் காட்சி விரிவாக இருந்தாலும் நுட்பமாக காணமுடிந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் எதிர்வினைபுரிகிறார்கள். திருதராஷ்டிரர் குற்றவுணர்ச்சியுடன் இருக்கிறார். குந்தி அடக்கிய வன்மத்துடன் இருக்கிறாள். காந்தாரிக்கு சந்தேகம் இருக்கிறது. குழப்பமும் இருக்கிறது

எந்த சந்தேகமும் இல்லாமல் வந்து நிற்பவர்கள் அசலையும் பானுமதியும்தான். அவர்களின் கணவர்களை கொன்று ரத்தம்கொண்டு கூந்தல்முடிவதாகத்தான் அவள் வஞ்சினம் உரைத்தாள். ஆனாலும் அவர்கள் திரௌபதியை அணைத்து ஏற்றுக்கொள்கிறார்கள். அந்த பெருந்தன்மையும் பெண்ணை ப்புரிந்துகொள்ளும் பெண்மனசும் அற்புதமாக வந்திருக்கின்றன

சித்ரா