Wednesday, July 11, 2018

இரு பருந்துகளின் கதை



அன்புள்ள ஜெ ,


மழைப்பாடலில் வரும் சுகோணன்  , சுபிட்சன் எனும் இரு பருந்துகளின் கதையை வாசித்ததிலிருந்து 'விதியின் ஜாலம் ' எனும் வார்த்தை இரண்டு நாட்களாக  என் மனதில் ஓடி கொண்டிருக்கிறது  . ஒரு காரணம் பசியால்  சாகவிருந்த  பருந்துகள் பின்பு அரசனின்  காருண்யத்தால்  வலுவானதாக  மாறுவது , இன்னொரு காரணம் சகுனி தனக்கு வந்த தூதை  தானறியாமலேயே  ,தன் செயலான  பருந்தை  அம்பெய்த  செயல் மூலம் இழப்பது  , அந்த இழப்பின்  கடைசி நுனியான நாசிகன் தூது கடிதத்தை உண்ணும் இடத்தில் கூட அறியாமல் அதே சமயம் உள்ளுணர்வால் உணர்ந்து நிற்பது , ஒருவேளை தூது அவர் படித்திருந்தால்  வரலாறே  மாறியிருக்கும் , விதியின் விளையாட்டு என இதை நினைத்தேன் அல்லது விதியின் விளையாட்டு மைதானத்தின் சோழிகளாக கதாபாத்திரங்கள்  மற்றும் நிகழ்வுகள் என .
முன்பு ஒரு முறை நேர்பேச்சில் மார்த்தாண்ட  வர்மாவின் பிராமண அமைச்சர் கதை பற்றி சொன்னீர்கள்  , அசோகவனத்தில்  வரும் பகுதிகள் என சொல்லி . இந்த பருந்துகளின் கதை வாசித்த போது ஏனோ அது ஞாபகம் வந்தது .

இந்த பருந்தின் கதையில் முன்பு வந்த உவமை கதையான  சிங்கம் பசு கழுதை புலிகள் கதையும் இணைந்து கொள்கிறது , இதன் ஆழம் இன்னும் பிடி கிடைக்க வில்லை , அநேகமா சீக்கிரத்திலேயே  கண்டுபிடித்து விடுவேன் :)

ராதாகிருஷ்ணன்