Monday, July 30, 2018

சோழர்குலம்



ஜெ ,


வித்யுத்தன் வரும் பகுதி மிக பிடித்தது , புத்திசாலித்தனமான  நகைச்சுவை , ஆனால் அதை கள்ளமில்லாமல்  வெளிப்படுத்துகிறார்  . இது போலவே முன்பு பீஷ்மரிடம் அவரது கதையையே நகைசுவையாக்கி அவரிடமே சொல்லும் குடிகார சூதன் ஞாபகத்திற்கு வருகிறார் . நகைச்சுவை (  அங்கதம் )  எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சரியான பிரதிகள்  இவ்விருவரும்  .

ஜெ , இப்பகுதியில்  காந்தார  வம்சம்  பற்றிய குறிப்பு வருகிறது , அதில்  சேர சோழ வம்சங்கள்  இவர்களில் இருந்து உருவானவர்கள்  என்று வருகிறது , அதாவது காந்தாரத்திலிருந்து  தமிழ் நிலத்திற்கு  வந்து அரசை உருவாக்கியவர்கள் என்று , பீஷ்மரும் அதை ஆமோதித்து  அதற்கு  சான்றாக  ஒரு வேத குறிப்பு பற்றி சொல்கிறார் .

ஆச்சிரியமாக இருந்தது . பாண்டிய  வம்சம் மீனவர்களில்  இருந்து வந்தவர்கள் என கொற்றவை நாவல் மூலமாக அறிந்திருந்தேன் , சேர சோழர்களை பற்றி இப்போதுதான் அறிகிறேன் , இது பற்றி தேடி படிக்க ஆர்வமாக உள்ளேன் 

ராதாகிருஷ்ணன்