Thursday, July 26, 2018

அனுமனின் கதை



ஜெ

வெண்முரசில் ஆரம்பத்தில் அனுமனின் கதை ஆயுதம் வந்தது. அதை பீமன் ஏந்துவான் என நான் நினைத்தேன். ஏனென்றால் அது துரியோதனன் பிறந்த அன்று தானும் வந்தது. உடன்பிறந்தே கொல்லும் நோய் என்று நினைத்தேன். ஆனால் அதை பால்கிகர் எடுத்துள்ளார். அவரால்தான் அதை அசைக்கமுடியும். அவரைப்போன்ற ஒரு பேருருவர் வந்தபோது அடாடா இவருக்காகவா இது காத்திருந்தது என நினைத்தேன்.போரில் எப்படி அது செயல்படப்போகிறது அஞ்சனைமைந்தன் என்ன செய்யப்போகிறான் என்று அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்

செல்வா