Friday, July 20, 2018

அருமணி




அன்புள்ள ஜெ

வெண்முரசின் பேஸ் மாறிக்கொண்டே இருக்கிறது. இந்நாவலில் கொத்துக்கொத்தாக விடைபெறுதல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அவற்றில் சிறப்பு விதுரரின் விடைபெறல்தான். அவரால் எதையும் விடமுடியவில்லை. எதையும் சமாளிக்கவும் முடியவில்லை. அவருடைய நிலைகுலைவும் மாறிமாறி அவர் பேசிக்கொண்டிருப்பதும் வாசிக்க ஒருவகையான படபடப்பு உருவாகியது. அந்த அஸ்வதந்தம்தான் அவரை போட்டுப் படுத்துகிறது. அது ஒரு பெரிய குறியீடாக ஆகிவிட்டது. அஸ்தினபுரியே அவருக்கு குறியீட்டளவில் கிடைத்துவிட்டது. ஒரு வைரத்தின் வடிவில் அது அவருடன் இருக்கிறது. ஆனால் அது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். நிஜம் அல்ல. ஒரு உருவகம் மட்டுமே. அதுதான் அவருடைய நரகம்

சாரங்கன்