Wednesday, July 18, 2018

துச்சாதனனும் துரியோதனனும்



அன்புள்ள ஜெ

துச்சாதனனும் துரியோதனனும் விடைபெறும் காட்சிகள் மிக மென்மையான மொழியில் இயல்பான தடுமாற்றங்களுடனும் மனமாற்றங்களுடனும் எழுதப்பட்டுள்ளன. துச்சாதனனுக்குப் பேசவே தெரியவில்லை. அவன் வழக்கம்போல ஓரிரு சொற்களில் சொல்லிவிட்டு விடைபெறுகிறான். துரியோதனன் சொலல்வல்லன் ஆகியாயிற்று. ஆனால் சொல்ல முடியவில்லை. அவர்களின் அந்தத் தயக்கமும் குழப்பமும் மிக அற்புதமாக வந்துள்ளன. அவன் ஒன்றைச் சொல்லி பிறகு தயங்கி மீண்டும் சொல்லி மீண்டும் தயங்கி எப்படியோ சொல்லிவிட்டோம் என்ற உணர்வை அடைந்து திரும்பிச்செல்கிறான். அவளுக்கும் அவன் சொல்லவந்தது புரிந்தும் விடடது. முழுமையான கவித்துவமான அத்தியாயம் அது

சாரங்கன்