Friday, July 27, 2018

பலர்




அன்புள்ள ஜெ

வெண்முரசின் கதைகளுக்குள் சென்றுகொண்டே இருக்கும் அனுபவம்தான் இதுவரை இருந்த்து. பின்னிப்பின்னிச் செல்லும் கதை அமைப்பு. இப்போது கதை நேரடியாகச் செல்கிறது. ஆனால் அது ஒரு தோற்றம்தான். கதைசொல்லி அல்லது கதையை நிகழ்த்துபவன் என ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கிக்கொள்கிறீர்கள். ஆகவே கதை ஒரே ஒழுக்காகச் செல்கிறது என நினைக்கிறோம். ஆனால் கதை கலைடாஸ்கோப் போல திரும்பி வெவ்வேறு கதைமாந்தர்களைத்தான் காட்டிக்கொண்டிருக்கிறது. பானுமதியின் கதைதான் விதுர்ர் விகர்ணன் குண்டாசி தாரை அசலை என அத்தனைபேருடைய கதையாகவும் இருக்கிறது. அவர்கள் தங்களுக்கு நிகழ்ந்ததைச் சொல்கிறார்கள். அதன் வழியாக கதையின் பின்னல் உருவாகி வளர்ந்து செல்கிறது. ஒவ்வொரு கதையும் வழக்கம்போல ஒவ்வொரு மாதிரியில் உள்ளன. அசலையிடம் இருக்கும் எளிமையான அன்பும் பானுமதியிடம் இருக்கும் அரசிக்குரிய கம்பீரமும் தாரையிடம் இருக்கும் நேர்மையான தீவிரமும் அவ்வளவு வேறுபாட்டுடன் காட்டப்பட்டுள்ளன

மகாதேவன்