Thursday, July 26, 2018

சங்கன்




ஜெ

சங்கன் கொள்ளும் துடிப்பை ஒரு கோணத்தில் பார்க்க முடிகிறது. மிகப்பெரிய விஷயங்களுடன் இணைந்துகொள்வதற்கு இளைஞர்களுக்கு ஒரு துடிப்பு இருக்கிறது. அவர்களுக்கு அது ஒருமுக்கியத்துவத்தை அளிக்கிறது. இளைஞர்கள் அரசியல் கிளர்ச்சிகள் வன்முறை இயக்கங்கள் ஆகியவற்றில் கலந்துகொள்வதும் இதனால்தான். அவர்கள் இதற்காகக் கிளம்பிச்செல்கிறார்கள். அது அவர்களை முக்கியமானவர்களாக ஆக்குகிறது. அவர்கள் வீட்டில் இருப்பதை இழிவாக நினைக்கிறார்கள். மூத்தவர்கள் அதில் லாபநட்டம் கணக்குப் பார்ப்பார்கள். அதெல்லாம் இளைய வயதினருக்குத்தெரியாது. அவர்களுக்குத் தெரிவதெல்லாம் ஹிரோக்கள் மட்டும்தான் சங்கனை பார்க்கையில் பரிதாபமும் ஏற்படுகிறது

சத்யா