Thursday, July 12, 2018

எஞ்சும் விழைவு



எஞ்சும்விழைவுடன் எழாச்சொல்லுடன் எவரும் உயிர்துறக்கலாகாது என்று குண்டாசி சொல்கிறான். இந்த அத்தியாயங்களில் அனைவருமே கொஞ்சம் நிலைகுலைந்திருக்கிறார்கள். கொஞ்சம் உண்மையை நோக்கிச் செல்கிறார்கள். அன்பு கொண்டவர்கள் அன்பு நிறைந்தவர்களாக ஆகிறார்கள். கசப்பு நிறைந்தவர்கள் மேலும் கசப்பு நிறைந்தவர்களாக ஆகிறார்கள். ஏனென்றால் உயிர்துறக்கவிருக்கும் தருணம் வந்துகொண்டிருக்கிறது என அறிந்திருக்கிறார்கள்.

சத்யா