Friday, July 20, 2018

சுருதை




அன்புள்ள ஜெ,


விதுரர் நிலைகுலைந்திருப்பதைக் காட்டும் ஒரு சிறு குறிப்பு அவர் சுருதை உயிருடன் இருப்பதாகவே நினைக்கிறார் என்பது. காலம் தடுமாற்றமாகிவிட்டது. ஆனால் அதேசமயம் அவருக்கு அவள் இல்லை என்பதும் தெரியும். அவர் சுருதையை ஏன் சொல்கிறார்? அவர் அந்த அஸ்வதந்தத்தை சுருதையிடமிருந்து ஒளித்தே வைத்திருந்தவர். அதை அவர் எடுத்துக்கொண்டிருக்கும்போது அவளையே நினைத்துக்கொண்டிருக்கலாம். முன்பு ஒருமுறை அவர் குந்தி சுருதை இருவர் நடுவே ஓயாமல் ஆடிக்கொண்டிருந்தவர் என்று வந்தது. அதைத்தான் ஞாபகப்படுத்திக்கொண்டேன்

சுந்தர்