Saturday, July 14, 2018

இருளிலிருந்து ஒளிக்கு



அன்புநிறை ஜெ,

நலமாக இருக்கிறீர்களா.

கரிய இருளென, நிழலெனத் திரளும் கௌரவர் நிரையிலிருந்து வெளியேறும் யுயுத்ஸு முற்றத்து வெயிலில் ஒளிகொண்டு அப்பால் சென்று அகல்வது அழகான காட்சி.   

முற்றத்து வெயில் முகத்தில் படாது வளர்ந்த பெண்கள் உலகறிவெனும் ஒளிபட்டு வெளியேறி வந்தது போல எனத் தோன்றியது - இலக்கியத்தில் பெண்களின் சித்தரிப்பு குறித்து சிலநாள் முன்னர் வாசித்த போது எழுந்து வந்த ஒரு உணர்வு இன்று வரிவடிவம் கண்டது போலிருந்தது.

மனம் ஒவ்வொன்றையும் எவ்வெவ்வாறோ கலைத்து அடுக்கி வைத்துக் கொள்கிறது.

மிக்க அன்புடன்,
சுபா