Sunday, July 29, 2018

பாச முகமும், போர் முகமும்



அன்பின் ஜெ,

வணக்கம்!

இன்றைய அத்தியாய(செந்நாவேங்கை-58)
தொடக்கத்தில் அரவான் கௌரவ படைநகர்வினூடே துர்மதனை சந்திக்கையிலும்,பின்னர் துரியோதனனை சந்திக்கையிலும் இருவருமே பாசாங்கில்லா
மிகையன்பு செலுத்தி அரவானை கட்டித்தழுவுவதும், அர்ஜூனனின் இளைய உருவத்தை  நினைவில்மீட்டெடுத்த மகிழ்ச்சியில் உவகை கொள்வதையும் படிக்கையில் மீண்டும் மீண்டும் மனதில் முட்டித்தவிக்கும் அந்த கேள்வி மற்றொருமுறை நினைவிலெழுந்தது,

இம்முறை கண்ட விடை சற்றே சாந்தம் கொள்ளும் வகையில் அமைந்தது.

//
“பிறகு ஏன் இந்தப் போர் நிகழ்கிறது?” என்றான் அரவான். “இதற்கு அவரோ வேறெவருமோ மறுமொழி சொல்லிவிடமுடியாது. இப்போரை முன்நின்று நிகழ்த்தும் இளைய யாதவரேகூட”
//

நட்புடன்,
யோகேஸ்வரன் ராமநாதன்.