Monday, July 23, 2018

மனைவியர்




அன்புள்ள ஜெ

துரியோதனனுக்கும் பானுமதிக்குமான உறவு ஒரு இலட்சிய உறவாகவே சொல்லப்பட்டிருந்தது. ஒருவன் மனதுக்குள் நல்லவன் என்றால் அவன் மனைவிக்கு அது தெரிந்திருக்குமென்பார்கள். பானுமதியின் குணச்சித்திரத்துக்கு அழுத்தம் கொடுக்க அவள் கடைசிவரை துரியோதனனை அணுகவே விடவில்லை என்று சொல்லிவிடுவீர்களோ என்று பயந்துகொண்டிருந்தேன். அப்படி இல்லை என்று தெரிந்ததும் மிகப்பெரிய நிறைவு எற்பட்டது. அவர்களின் அந்த கூடல் காட்சி மிக சஜஸ்டிவ் ஆக நுட்பமாக அமைந்திருந்தது. அவள் அவனை நோக்கி முதல் அடி எடுத்து வைப்பதும் அவனுக்குள் நுழைவதற்கான இடத்தைக் அவளே கண்டடைவதும் மிக அற்புதமாக காட்டப்பட்டிருந்தது. அதேபோல துச்சாதனனை அசலை ஏற்றுக்கொள்ளும் காட்சியும் அதிகம் பேச்சு இல்லாமல் சிறப்பாக இருந்தது.

ஜெயக்குமார்