Wednesday, July 25, 2018

நச்சு



ஜெ

நாலைந்து நாட்கள் ஆகியும்கூட நினைக்க நினைக்க குமட்டும் உவமையாக உள்ளது வாயில் ஊறும் எச்சில் மலம் என்று ஒருவனுக்குத் தோன்றினால் என்ன ஆவான் என்பது

ஆனால் குண்டாசி இனிமையான மனதுடன் செல்கிறான். அவன் கொண்ட அந்த தன்னைத்தானே குமட்டிக்கொள்ளும் மனநிலையில் இருந்து அவனுக்கு விடுதலை வந்துவிட்டது

நஞ்சை தொண்டையிலேயே வைத்திருந்த சிவனைப்போன்றவன் அவன், அதைஅவன் இப்போது அமுதமாக ஆக்கிவிட்டான்


சிவக்குமார்