Friday, July 20, 2018

பானுமதி



நீ எனக்கென எதையும் அளிக்கவேண்டாம்” என்று அவன் சொன்னான். இச்சொற்களைச் சொல்லாத ஆண்களுண்டா என்று எண்ணிக்கொண்டாள். “இது எனக்காகவே” என்றாள். என்ற இடத்தை வாசித்ததும் நுட்பமான இடம் என நினைத்தேன். ஆண்கள் அப்படிப் பெண்களிடம் சொல்வதற்கு எனக்கு எல்லாமே வேண்டும் என்றுதான் அர்த்தம். ஆனால் பெண்கள் இல்லை இதெல்லாம் எனக்காக என்றுதான் சொல்லவேண்டும். கொடுப்பதனால் அவனுடைய ஈகோ புண்படாமல் கொடுக்கவேண்டும். பானுமதி எவ்வளவு பாந்தமாக எல்லாவற்றையும் புரிந்துகொண்டிருக்கிறாள் என எண்ணும்போது ஒரு நெகிழ்வு ஏற்பட்டது

எஸ்