Thursday, July 12, 2018

மரணதண்டனை


           



           ஜெ

            வெண்முரசின் இப்பகுதி முழுக்க உணர்ச்சிகரமான சந்திப்புகளாகவே இருக்கின்றன. ஒவ்வொருவருக்கும் அவர்கள் இறப்பை நோக்கிச் செல்கிறார்கள் என்று தெரிந்திருக்கிறது. அவர்கள் இறுதிவிடை கொள்கிறார்கள். கடைசியாகச் சொல்வதைச் சொல்கிறார்கள். மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதியின் கடைசி நாட்கள் போலிருக்கின்றன இந்த நாட்கள்.  சொல்லப்போனால் நாட்கள் கூட இல்லை. ஒரே நாள்தான். காலையில் கொற்றவை பூஜை. மறுநாள் கிளம்பப் போகிறார்கள்.அதற்குள் இத்தனை கண்ணீர். இவ்வளவு கசப்பு.

            ஜெயராமன்