Friday, April 1, 2016

ஆண் பெண் ஆடல்



அன்புள்ள ஜெமோ

ரம்பகரம்பனின் கதையை இன்றைக்குத்தான் வாசித்தேன். ரம்பன் பாதாளத்துக்கு எருமையரசியுடன் செல்லும் இடம் திகைக்க வைத்தது. ஆண்பெண் உறவின் ஒரு நுட்பமான கரிய பக்கம்

சொல்லப்போனால் எல்லாமே கரியபக்கங்களினால் ஆன கதை இது. எல்லா கதையுமே இரட்டை ஆளுமையுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. பயமூட்டுகிறது இது

அவள் பூர்ண அர்ப்பணிப்புடன் இருக்கிறாள். அவளை அவன் தான் சீண்டி எழுப்புகிறான். நீ கொஞ்சமேனும் எனக்கு தடையைக்கொடு என்கிறான்.

அவள் விஸ்வரூபம் கொள்ளும்போது அவளுக்குள் வாழ்ந்த பிறக்காத மகன் எழுகிறான். அவன் ரம்பனைக் கொல்கிறான்.

அந்தக்குற்றவுணர்ச்சியில் அவள் அக்குழந்தைகளை கைவிட்டுச்செல்கிறாள். ஆண் பெண் உறவின் நுணுக்கமான உளவியல்பின்னல்

சண்முகம்