Monday, November 30, 2015

பெண்ணுக்கு எதிராக

ஜெ

காண்டீபம் முடியும்போது மீண்டும் ஒரு ஆழமான துக்கம் வந்தது. பெண்களின் வாழ்க்கை. நான் வெண்முரசிலே ஆரம்பம் முதலே பெண்ணின் வாழ்க்கையைத்தான் பார்த்துக்கொண்டு வருகிறேன். இதில் பாஞ்சாலி தனக்கென்று அமைத்துக்கொண்ட அரியணையைப்பார்த்தபோது எனக்கு பாவம் என்றுதான் தோன்றியது. பெண்கள் அப்படி நிமிர்ந்து அமர்வதை ஒருபோதும் ஆண்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள். அனுமதிக்க மாட்டார்கள்

மகாபாரதம் வாசிக்கும்போது துரியோதனனுக்கு என்ன அப்படி ஒரு வஞ்சம் ஏன் அவளை சபைக்கு இழுத்துவந்து அவமரியாதைசெய்தான் என்று நினைப்பேன். ஆனால் இந்த நாவலில் நீங்கள் மனித உளவியலை வைத்து அருமையாக விளக்கம் அளிக்கிறீர்கள். துரியோதனன் மேல் பிரைட் கொண்டவன். அவனால் பாஞ்சாலியின் நிமிர்வை ஏர்றுக்கொள்ளவே முடியாது

அதைத்தான் நாம் கர்ணன் பீஷ்மர் உள்ளிட்ட  அத்தனைபேரிலும் காண்கிறோம். அப்படிப்பார்த்தால் பாரதப்போரே ஒரு பெண்ணுக்கு எதிராக ஆண்கள் செய்த போர் என்றுகூட வாசிக்கமுடியும். இத்தனை நுட்பங்களை இதில் பார்ப்பதனால்தான் விலகவே முடியாமலிருக்கிறது

நான் நடுவே விட்டுவிட்டு இப்போதுதான் வாசித்து முடித்தேன். எப்படித்தான் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் என்றே தெரியவில்லை

சந்திரா