Friday, November 27, 2015

வாசகர்கடிதங்கள்



ஜெ

அவ்வப்போது நிறையபெர் தொடர்ந்து கடிதங்கள் எழுதுவார்கள். கடலூர் சீனு எழுதும் கடிதங்களும் சுவாமி எழுதும் கடிதங்களும் ஒரே வகையானவை. நுட்பமானவை. விரிவாக எழுதுபவர் தண்டபாணி துரைவேல், மகராஜன் போன்றவர்கள். இந்தக்கடிதங்களெல்லாம் எங்களுக்கு மிகப்பெரிய திறப்புகளை அளிக்கின்றன.

அவ்வப்போது நிறைய எழுதக்கூடிய சிலர் நிறுத்திவிடுகிறார்கள். ராமராஜன் மாணிக்கவேல், சண்முகம், முருகவேலன் போன்றவர்கள் எழுதாமலாகிவிடுகிறார்கள். இதெல்லாம் ஏன் நிகழ்கிறது என்று நினைத்தேன். வெண்முரசை தொடர்ந்து இத்தனைபேர் வாசிக்கிறார்கள் என்பதே ஆச்சரியம்தான்

ஜெயச்சந்திரன்