Friday, November 27, 2015

முடிவில்



ஜெ

வெண்முரசு காண்டீபம் முடியப்போகிகிறது என்பது ஒரு தனிமையை அளிக்கிறது. ஏனென்றால் தினமும் இதை வாசித்துக்கொண்டிருக்கிறேன். சிலசமயம் ஒரே அத்தியாயத்தை ராத்திரியிலும் வாசிப்பதுண்டு. இது வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆகிவிட்டது. இனி கொஞ்சநாள் இல்லை. அப்போது என்ன செய்வது என்ற தவிப்புதான். முந்தைய நாவல்களுக்குஇடையே உள்ள காலகட்டத்தில் நான் பழைய அத்தியாயங்களைத்தான் வாசித்துக்கொண்டிருப்பேன். புத்தக்ங்கள் வாங்கியிருக்கிறேன். ஆனால் இதுவரை புத்தகங்களை வாசிக்கவில்லை. என்றைக்காவது வாசிக்கலாம் என நினைக்கிறேன்

சீக்கிரம் அடுத்த நாவலை ஆரம்பியுங்கள்

சரவணன்