Sunday, November 22, 2015

முடிவு

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம்.

"காண்டீபம் முடித்துவிட்டேன்" என்ற வரிகளை படித்து விட்டு அதற்குள்ளாகவா! என்று பதைபதைப்புடன் 'வெண் முரசை' படித்தால் இன்றைய அத்தியாத்துடனேயே  முடித்து விட்டீர்களே.நிச்சயமாக இதை எதிர் பார்க்கவில்லை. பெயர் தான் 'காண்டீபம்' என்றாலும்  இறுதியில் அர்ஜுணனை க் காட்டிலும் 'நேமி நாதர்' தான் விஞ்சி நிற்கிறார் -“இதை உடைத்து மீண்டு சென்றவர் ஒருவரே. என் தமையன் அரிஷ்டநேமி” என்றாள்" உங்கள் வெறுமைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். மீண்டு வருக!
அன்புடன்.
அ.சேஷகிரி

அன்புள்ள சேஷமிரி

நாவல் முடியவில்லை
25 ஆம் தேதிவாக்கில்தான் முடியும் நான் எழுதிமுடித்துவிட்டேன் என்றுதான் சொன்னேன்

ஜெ