Saturday, November 14, 2015

பூப்பந்து

அன்புள்ள ஜெ

காண்டீபத்தில் இதுவரை காண்டீபமே வரவில்லை. அர்ஜுனன் பாசுபதாஸ்ரம் போன்றவற்றைப் பெறுவதே நாவலின் முடிவாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் நாவல் அவன் அகிம்சை அடைந்து யோகியாக மிளிர்வதை நோக்கிச்சென்றுகொண்டிருக்கிறது

அர்ஜுனனை விரும்பாத அவள் அகிம்சையை விரும்பும் அந்த யோகியை விரும்புகிறாள் அதுதான் அவளுக்கு அவனுடன் உள்ள உறவு என்று நினைக்கிறேன்.

நுட்பமாக பேசிக்கொள்ளும் சாதாரண உரையாடல்கள் இந்த பகுதியின் சிறப்பு. ஆணும்பெண்ணும் பேசும் ஸ்வீட் நத்திங் என்று சொல்லலாம். ஆனால் அவர்கள் ஒரு பூப்பந்தட்டம்போல சொற்களை விட்டெறிந்து பேசிக்கொண்டே ஆராய்ந்துகொண்டே இருப்பது அழகு

சாரங்கன்