Saturday, November 28, 2015

காண்டீபத்தின் உருவம்

ஜெ,

காண்டீபம் அபிமன்யூவில் முடிந்தது அழகு. ஏனென்றால் அங்கேதான் அது முடியவேண்டும். அர்ஜுனனில் இருந்த நுட்பமான ஒரு விஷயம் நேமியால் இல்லாமலாகிவிட்டது. அது என்னவென்றால் துருபதனை கட்டி இழுத்துவந்து துரோணர் காலிலே போட்ட அந்த தயக்கமில்லாத தன்மை. அவன் முதிர்ந்துவிட்டான்

அவனிடமிருந்து போனதெல்லாம் பையனிடம் போய் குடியிருக்கிறது. அவன் இவனாக ஆகிவிட்டான். நீங்கள் இன்றைய காந்தி நூலிலே எழுதியிருப்பீர்கள், காந்தியிடமிருந்து போனதெல்லாம் மகனிடம் போய் நிறைந்தது என்று. அதேமாதிரித்தான்

அபிமன்யூ கடைசியில் வருகிறான். உண்மையில் அவன் தான் காண்டீபம் என்னும் வில். அவனை நினைத்தபடியே நாவலை முடிக்கிறேன்

சாமிநாதன்