Monday, November 9, 2015

அர்ஜுனன் அகிம்சை

ஜெ சார்

சுபத்திரையும் அர்ஜுனனும் பாலைவனப்பாதையில் பேசிக்கொண்டே நடக்கும் இடமும் சரி அவர்களின் உறவின் ரகசியங்களை யாதவ முதியவர்கள் அறிந்துகொள்வதும் சரி நுணுக்கமானவை. அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அவளுக்கு அர்ஜுனனைப்பிடிக்கவில்லை ஆனால் இந்த யோகியைப்பிடிக்கிறது. இந்த யோகி அரிஷ்டநேமியால் அருகநெறிக்கு கொன்டுவரப்பட்டவர். அர்ஜுனன் அருகநெறியின் அகிம்சை தழைக்கவேன்டும் என வேன்டிக்கொள்ளும் இடத்தில் என் மனம் உருகிவிட்டது

சாரங்கன்