Friday, November 27, 2015

சிறுவர்



ஜெ

என்னதான் சொல்லுங்கள். சின்னப்பையன்கள் வந்ததுமே கதை எங்கோ போய்விட்டது. அவர்களின் துடிப்பான உலகம் ஒரு அழகு. போர் என்றால் நாம் நினைக்கும் போர் அல்ல. அதெல்லாம் அவர்களுக்கு விளையாட்டு. பெரியவர்கள் சொல்லும் கதைகளிலிருந்து துண்டுத்துண்டாகப்பொறுக்கி எடுத்துக்கொண்டு அவர்களே ஒரு உலகத்தை உண்டுபண்ணிக்கொள்கிறார்கள்

அதிலும் வெள்ளைக்குதிரை என்று சொன்னதுமே இருவரும் ஒரே அலையால் அடித்துச்செல்வதுபோல வாசலை நோக்கி ஓடும் காட்சி சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அற்புதமான நுட்பம் அது. பையன்கள் அப்படித்தான் இருப்பார்கள்.

இதேபோல குண்டாசியும் யுயுத்ஸ்வும் இருந்த நாட்களெல்லாம் நினைவுக்கு வருகின்றன. அவர்கள் வளர்ந்துவிட்டார்கள். நாவல் நம்மை அறியாமலேயே இரண்டு தலைமுறையைக் கடந்து வந்துவிட்டது.

சித்ரா