Tuesday, November 3, 2015

அன்னமும் சாங்கியமும்

இன்று வண்ணகடலின் 9வது அத்யாயம் வாசித்தேன் . பீமன் , துரியோதனன் இருவரும் உடலால் தன்னையறிபவர்கள் , பீமன் தன்னை எங்கும் நிறைத்து கொள்ளும் உணவாக (அதாவது தன்னை முன்வைக்காதவனாக)  , துரியோதனன் எதையும் தன்னுள் செரிக்க முயன்று தன் இருப்பை நிறுவ முயலும் யானையாக ...

இதுவே மேலுந்து கபிலரின் மூலம் சாங்கியமாக மாறுகிறது , இருப்பே அன்னையாக , அவ்விருப்பை உணர்வதே அன்னையை அறிவதாக ... தன் முன் கிடக்கும் கல்லில் ஒட்டுமொத்த பிரபஞ்ச இருப்பை உணர்வதன் மூலம் , பிரபஞ்சமே  அன்னையின் உடலாக , நாம் உண்ணும் உணவும் அவள்தான் , உணவை விழுங்கும் யானையும் (இருப்பும் ) அவள்தான் .

ராதாகிருஷ்ணன்