Sunday, November 22, 2015

அர்ஜுன சன்யாசி

ஜெ

நான் இலக்கியம் வாசிக்க ஆரம்பித்து பதினைந்து வருடங்களாகின்றது. கல்லூரியில் படிக்கும்போதிருந்தே வாசிக்கிறேன். வெண்முரசு அத்தனை இலக்கியங்களையும் விழுங்கிவிட்டது

பாரதி ஒரு கதையில் ‘அர்ஜுன சன்யாசி’ என்று ஒருவரை கூப்பிடுவார். திருட்டுசன்யாசி என்று அதை நான் புரிந்துகொண்டிருந்தேன். இன்றைக்கு வெண்முரசு வாசிக்கும்போது வேறுமாதிரி தோன்றியது.

சுபத்திரைக்கு வேண்டிய யோகி பெண்களை நிறையப்பார்த்து நிலையான கன்கள் கொண்டவனாகவும் இருக்கவேண்டும். இந்த விஷயம் ஆச்சரியமானது. ஒரு ஸ்த்ரீலோலனின் மனசுக்குள் ஒரு துறவியும் இருப்பான். அதைத்தான் அவள் விரும்புகிறாள்

அதுதான அர்ஜுனசன்யாசி என்று தோன்றியது

ப்ரியா