Thursday, November 12, 2015

இரு இழைகள்

ஜெ

இருசரடுகளாக செல்லும் நேமிநாதரின் கதையும் சுபத்திரை அபிமன்யூ கதையும் எப்படி ஒன்றாக இணையும் என்று தெரியாமல் குழப்பம் இருக்கிறது. ஆனால் ஏதோ ஒரு அற்புதமான நோக்கம் உங்களுக்கு இருக்கும் என்றும் வெறுமே இந்த இடத்தில் அதைச் சொல்லிவைப்போமே என்று நினைக்கவில்லை என்றும் தோன்றுகிறது.

நேமிநாதரின் கதையின் உச்சி அந்த வெள்ளை யானைதான். குழந்தைமுதல் வாலிபப்பருவம் வரை அதன் வளர்ச்சியின் நுட்பமான சித்திரம்

சாரங்கன்