Saturday, November 28, 2015

வீரமும் ஆன்மீகமும்



ஜெ

வெண்முரசு நாவல்கள் எதிலும் இல்லாத வடிவம் இந்த காண்டீபத்துக்கு. இதில் ஆரம்பத்திலே இருக்கும் பிரபஞ்சதரிசனமே இல்லை. நேராகவே சுஜயனின் கதை ஆரம்பிக்கிறது. அவன் காணும் , அவனுக்குக் கதைசொல்லும் சுபகை காணும் அர்ஜுனனின் சித்திரம்தான் நாவலில் இருக்கிறது. ஆனால் ஓர் இடத்தில் நாவல் அப்படியே திரும்பி நேரடியாகக் கதைசொல்லத் தொடங்குகிறது. அதுவரை சொல்லப்பட்ட கதைகளை எல்லாம் தொகுத்து அதன் சாராம்சத்தை இந்தப்பகுதி சொல்லி முடிக்கிறது.

இந்த வடிவத்தில் தனியான பகுதிகளாக நின்றிருப்பவை ரைவதர், ரிஷபர், நேமி ஆகியோரின் துணைக்கதைகள்தான். அந்தக்கதைகளுக்கும் அர்ஜுனன் சந்தித்த முதலைகளுக்கும் அதற்கு முன்னால் அவன் போன நாகர்குல உலகத்திற்கும் பெண்ணாகவும் ஆணாகவும் இருந்து அறிந்த உண்மைகளுக்கும் ஆழமான ஒரு தொடர்பை நம்மால் உருவாக்கிக்கொள்ளமுடியும் என நினைக்கிறேன்

இந்த நாவல் ஒரு ஆன்மிகநாவலாக ஆகியிருக்கிறது ஜெ. வீரத்தைச் சொல்லவந்து தியானத்தைச் சொல்லி முடித்துவிட்டீர்கள்

சண்முகம்